இதுதான் மெஸ்ஸிக்கு கிடைத்த வரம்.. இந்த விஷயத்தில் ரொனால்டோ ரொம்ப பாவம்.. ஏன் தெரியுமா? | Cristiano Ronaldo: Cristiano Ronaldo Cries Alone While Lionel Messi Celebrates with a Nation, Leaving CR7 Fans Envious

Spread the love

Sports

oi-Yogeshwaran Moorthi

அட்லாண்டா: போர்ச்சுகல் அணி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறிய போது, நட்சத்திர வீரரான ரொனால்டோ கண்ணீருடன் தனியாக நின்று அழத் தொடங்கினார். அப்போது ரொனால்டோவுக்கு ஆறுதல் சொல்லவோ, அவருக்கு கொண்டாட்டமான ஃபெர்வெல் கொடுக்கவோ எந்த போர்ச்சுகல் வீரரும் முன் வரவில்லை. ஆனால் மெஸ்ஸி ஒரு சொட்டு கண்ணீர்விட்ட பின், ஒட்டுமொத்த அர்ஜென்டினா அணியும் அவர் பக்கம் நின்று கொண்டாடி தீர்க்கிறது. இது ரொனால்டோ ரசிகர்களை பொறாமை கொள்ள வைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் காலிறுதி சுற்றுப் போட்டிகள் நாளை தொடங்குகின்றன. காலிறுதி சுற்றுக்கு ஃபிரான்ஸ், மொராக்கோ, ஸ்பெயின், பெல்ஜியம், நார்வே, இங்கிலாந்து, அர்ஜென்டினா, ஸ்விட்சர்லாந்து ஆகிய 8 அணிகளும் முன்னேறி இருக்கின்றன. நாளை நள்ளிரவு 1.30 மணிக்கு ஃபிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகள் மோதுகின்றன.

Cristiano Ronaldo

இதனிடையே ஃபிஃபா உலகக்கோப்பை தொடரிலும் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ரசிகர்களுக்கு இடையிலான மோதல் முடிவுக்கு வரவில்லை. போர்ச்சுகல் அணி வெளியேறிய பின்னரும், அர்ஜென்டினா அணி தோற்க வேண்டும் என்று ரொனால்டோவின் ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இதே நிலைதான் இருக்கிறது.

ஆனால் நேற்றிரவு நடந்த போட்டியில் எகிப்து அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின் மெஸ்ஸிக்கு நேர்ந்த சம்பவம் ரொனால்டோ ரசிகர்களையே பொறாமை கொள்ள வைத்துள்ளது. அதாவது போர்ச்சுகல் அணி தோல்வி அடைந்த பின், ரொனால்டோ கண்ணீருடன் நின்று அழுது கொண்டிருந்தார்.

தனது நாட்டிற்காக உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற சோகத்துடன், ரசிகர்களுக்கும் பிரியாவிடை கொடுத்து சென்றார். ரொனால்டோ போன்ற ஜாம்பவான் வீரர் கண்ணீர் சிந்திய போது, போர்ச்சுகல் அணியின் சக வீரர்கள் யாருமே முன் வந்து அவருக்கு ஆறுதல் கூறவில்லை. அவரின் கடைசி உலகக்கோப்பை போட்டியின் போது கூட சக வீரர்கள் அவரை வெறுத்தனர் என்றே சொல்லலாம்.

ஆனால் எகிப்து அணியை வீழ்த்திவிட்டு மெஸ்ஸி ஒரு சொட்டு கண்ணீர் சிந்தினார். அதனை கண்டு உணர்ந்த அர்ஜென்டினா அணியின் சக வீரர்கள் உடனடியாக அவரை தங்களின் ராஜாவாக கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள். பயிற்சியாளரில் இருந்து அத்தனை வீரர்களும் மெஸ்ஸிக்கு பின் அணி திரண்டனர். மெஸ்ஸிக்கு கிடைத்த இந்த வரம் ரொனால்டோவுக்கு கிடைக்கவில்லை என்று அவரின் ரசிகர்களே ஏக்கம் கொள்ள தொடங்கி இருப்பது ரசிகர்களிடையே விவாதப் பொருளாக மாறி இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *