‘இது தொடக்கம் மட்டுமே’.. லஞ்சம் குறித்து அமைச்சர் கீர்த்தனா அதிரடி|‘This Is Just the Beginning’: Minister Keerthana on Bribery

Spread the love

விருதுநகர் வேம்பக்கோட்டையில் மாற்றுத்திறனாளி ஒருவர் பட்டாசுக் கடை வைக்க தடையில்லாச் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

அவரிடம் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார் அவர்.

இதையடுத்து வேம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதைச் சுட்டிக்காட்டி தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“லஞ்சம் வாங்கினாலும் சரி, தவறு செய்தாலும் சரி யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி.

இது தொடக்கம் மட்டுமே. மாற்றம் வரும் வரை நடவடிக்கை தொடரும்.

லஞ்சம் குறித்துத் தெரிந்தால் WhatsApp Number (+91 70103 27687) எண்ணில் புகார் தெரிவியுங்கள்.

தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தப்ப முடியாது.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *