ஆனால் அந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத நிறுவனம். ஆனால் முதலீட்டாளர்கள் குழப்பத்தில் Parle Industries என்ற ரியல் எஸ்டேட் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வரும் நிறுவனப் பங்குகளை வாங்கியதால், அதன் பங்கு 5 சதவிகிதம் வரை உயர்ந்தது.
பங்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்க, மற்றொரு புறம் மெலோடி சாக்லேட்டை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக இந்த சாக்லேட்டுக்கு அதிக தேவை ஏற்பட்டு Zepto, Blinkit, Instamart போன்ற டெலிவரி ஆப்களில் பல இடங்களில் அவுட் ‘ஆஃப் ஸ்டாக்’ ஆனது.
இதுபற்றிய பேசிய பார்லே நிறுவனத்தின் துணைத் தலைவர் மயங்க் ஷா, “நாடு முழுவதும் Melody சாக்லேட்டுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதனால் விநியோகஸ்தர்களிடம் கூடுதல் ஸ்டாக் அனுப்புமாறு கூறியுள்ளோம்” என்றார். இந்நிலையில் உற்பத்தியையும் அதிகரிக்கவும் திட்டமுள்ளதாகக் கூறப்படுகிறது.
மெலோடி சாக்லேட்டை வாங்குவதில் ஏன் இத்தனை ஆர்வம் என்பதன் பின்னால் சில உளவியல் காரணங்கள் உள்ளன என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.