இந்தியாவுக்குதான் நன்றி சொல்லணும்.. டிரம்ப மானத்தை காப்பாற்றிய மக்கள்! உற்று நோக்கும் சீனா! | India’s 1.4 Billion Keeps US, China Tied in Global Popularity Race

Spread the love

India

oi-Halley Karthik

சென்னை: சர்வதேச அளவில் சீனா அல்லது அமெரிக்கா.. என எந்த நாட்டுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், அமெரிக்காவின் மானத்தை இந்தியர்கள் காப்பாற்றியிருக்கிறார்கள்.

சமீபத்தில் ‘பியூ ஆராய்ச்சி மையம்’ என்கிற அமைப்பின் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆய்வில், மொத்தம் 36 நாடுகளை சேர்ந்த மக்களிடத்தில் கேள்விகள் கேட்கப்பட்டன.

India s 1 4 Billion Keeps US

இதில் பெரும்பாலான நாடுகளை சேர்ந்த மக்கள் சீனாவுக்கு ஆதரவாகவே ஓட்டு போட்டிருக்கிறார்கள். சீனா தனது நாட்டை மாற்றியிருக்கும் விதம், அறிவியல் கண்டுபிடிப்புகள், ஆட்டோமொபைல் மற்றும் ஏஐ துறையில் செலுத்தும் ஆதிக்கம், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகள் ஆகியவற்றில் சீனா சிறப்பாக செயல்படுவதாக மக்கள் நினைக்கிறார்கள்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது 21% மக்களும், சீன அதிபர் ஜி ஜின்பிங் மீது 31% மக்களும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அதிலும் டிரம்புக்கு ஆதரவளித்த நாடுகளில் இந்தியா இருப்பதுதான் பெரிய பிளஸ் பாயிண்ட். ஜப்பான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா, போலாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இத்தனை நாடுகள் ஆதரவு தெரிவித்தும் கூட.. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா ஆதரவு தெரிவித்ததால்தான் டிரம்புக்கு சப்போர்ட் 21% ஆக அதிகரித்திருக்கிறது.

டிரம்பின் வெளியுறவுக்கொள்கைகள், வர்த்தக கொள்கைகள், வர்த்தக வரிகள், ஈரான் மீதான போர் போன்ற காரணங்களால்.. அவர் மீது மற்ற நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.

சீனாவுக்கு ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சப்போர்ட் செய்திருக்கின்றனர். நம்மை பொறுத்தவரை கால்வான் மோதல், சீன ஆப்கள், இப்படியான பிரச்சனையால் இந்தியர்கள் சீனாவுக்கு சப்போர்ட் செய்யவில்லை. அமெரிக்காவில் மாணவர்கள் விசா கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தாலும், இந்தியர்களுக்கான விசாவுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டிருந்தாலும் கூட இந்தியர்கள் பலர் அமெரிக்காவுக்குதான் சப்போர்ட் செய்கிறார்கள்.

இந்த ஆய்வின் முடிவு அமெரிக்காவுக்கு ஆதரவாக வந்ததற்காக.. இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் டிரம்ப் நன்றி சொல்ல வேண்டும் என்று சோஷியல் மீடியாக்களில் பலரும் கூறி வருகின்றனர். முடிந்தால் ஆடி பெருக்கு அன்று பால் காவடி எடுத்து பந்தத்தை உறுதி செய்துக்கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *