இதையடுத்து சரக்குகளை சுங்கத்துறை பறிமுதல் செய்து அபராதம் விதித்தது. மேலும், அவற்றை ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகளுக்கே திருப்பி அனுப்ப உத்தரவிட்டது. எனவே, துபாய்க்கு மறு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும் அல்லது இந்தியாவிலேயே மறுசுழற்சி மற்றும் கழிவுகள் அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்” என கூறியிருந்தன. இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி தெரிவித்தாவது, “மறு ஏற்றுமதி என்பது சரக்குகளை வந்த நாட்டிற்கே திருப்பி அனுப்புவதை குறிக்கும். மூன்றாவது நாட்டுக்கு அனுப்புவது சட்டத்திற்கும், பாசல் (Basel) சர்வதேச உடன்படிக்கையின் நோக்கத்திற்கும் முரணானது. மேலும், வளர்ந்த நாடுகள் தங்களின் கழிவுகளை மற்ற நாடுகளில் கொட்டும் நடைமுறை “கழிவு காலனித்துவம்” (Waste Colonialism) எனக் குறிப்பிடப்படுகிறது. இந்தியா பிற நாடுகளின் குப்பைகளை கொட்டும் இடமாக மாற அனுமதிக்க முடியாது.
ஒரு சட்டவிரோதத்தை மற்றொரு சட்டவிரோதத்தின் மூலம் சரிசெய்ய முடியாது. இந்தியாவிலேயே அந்தக் கழிவுகளை அழிக்க அனுமதிப்பது பொதுக் கொள்கைக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நோக்கத்திற்கும் எதிரானது. துபாய்க்கு மீள்ஏற்றுமதி செய்யவோ அல்லது இந்தியாவிலேயே அழிக்கவோ அனுமதிக்க முடியாது. அந்தக் கழிவுகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நாடுகளுக்கே மீண்டும் அனுப்பப்பட வேண்டும்.