‘இந்திய அரசு அனுமதித்த அளவுக்கு உள்ளேயே தமிழக அரசின் கடன் இருக்கிறது’- நிதித்துறை செயலர் சித்திக்| TN debt within Union-approved limit: Finance Sec Siddiq clarifies

Spread the love

இந்நிலையில் வெள்ளை அறிக்கை வெளியீட்டிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக்கிடம், கடன் சுமை அதிகரிக்க நலத்திட்டங்கள் காரணமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஏற்கெனவே உள்ள திட்டங்களை நிறைவேற்றவே கூடுதல் செலவாகிறது. ஆனால் நலத்திட்டங்கள் நிறுத்தப்படாது. வருவாய் திரட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

 நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக்

நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக்

அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு நிதியை உருவாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. யாரையும் குறை சொல்ல இந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. தற்போதைய நிலைமையை தெரிவிக்கவே அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

அரசுக்கு ரூ.100 வருவாய் கிடைத்தால் ரூ.45 செலவாகிறது. ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 45 ரூபாய் பற்றாக்குறையாக உள்ளது.

இந்திய அரசின் அனுமதி இல்லாமல் எந்தக் கடனும், மாநிலங்களால் வாங்க முடியாது. அவர்கள் அனுமதித்த அளவுக்கு உள்ளேயே தமிழ்நாடு அரசின் கடன் அளவு இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பின் முழு விவரங்கள் கீழே PDF-ஆக இணைக்கப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *