இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FIIs) தங்களது முதலீடுகளை வெளியேற்றுவது தொடர் கதை தான். ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர “ஷாக்’ ஒன்றைக் கொடுத்தனர் அவர்கள்.
அதாவது, அன்று (மே 29) மட்டும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் இருந்து வெளியேற்றிய பணம் – ரூ.21,105.86 கோடி. ஆனால், இதை ஓரளவு பேலன்ஸ் செய்யும் விதமாக, அன்று இந்திய முதலீட்டாளர்கள் ரூ.16,764.14-க்கு முதலீடு செய்திருந்தனர்.

“வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து தங்களது முதலீடுகளை 2021-ம் ஆண்டில் இருந்தே வெளியேற்றிக் கொண்டு தான் வருகின்றனர்.
ஆனால், இப்போதைய வெளியேற்றத்திற்கு பதிலாக பல காரணங்கள் வெளிவருகின்றன.
> தொடரும் ஈரான் போர்
> சறுக்கும் இந்திய ரூபாய் மதிப்பு
> பணவீக்க அச்சுறுத்தல்
> காலாண்டு முடிவுகள் சாதகமாக இல்லாதது
> வேல்யூயேஷன் பிரச்னை
> இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த பயம்
போன்றவற்றால் ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டாம் என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறுகிறார்கள்.