மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், ” இந்திய சினிமா தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான பாரதிராஜா அவர்களை இழந்திருக்கிறது.
கிராமத்து மண்ணின் வாசனை, மனித உறவுகளின் அழகு, காதலின் அப்பாவித்தனம் மற்றும் சாமானிய மக்களின் உணர்ச்சிகளை காலத்தால் அழியாத சினிமா கவிதைகளாக மாற்றியவர் அவர்.

அவருடைய திரைப்படங்கள் லட்சக்கணக்கான இதயங்களைத் தொட்டதோடு, தலைமுறை தலைமுறையாகப் பல திரைப்பட இயக்குநர்களுக்கும் ஊக்கமளித்தன.
மரியாதைக்குரிய பத்மஸ்ரீ மற்றும் பல தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்ற பாரதிராஜாகாருவின் பங்களிப்பு இந்திய சினிமாவிற்கு அளப்பரியது.