ஆனால், இந்த வருடம் இந்தியாவில் உள்ள சில குறிப்பிட்ட ஆலைகளில் இந்தச் சுத்தப்படுத்தும் முறைக்கான கட்டமைப்பு, சரியாக வேலை செய்யவில்லை என்று ஜப்பான் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஒரு குறைபாட்டிற்காக, தவறு நடந்த ஆலைகளை மட்டும் தடை செய்யாமல், ஒட்டுமொத்த இந்திய மாம்பழ இறக்குமதிக்குமே ஜப்பான் அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
இதனால், இந்தியாவில் இருந்து இனி எந்தவொரு மாம்பழத்தையும் ஜப்பானுக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இது இந்திய மாம்பழ வியாபாரிகளுக்குப் பெரிய கவலையையும் அதிர்ச்சியையும் தந்துள்ளது.
தற்போது பல மாநிலங்களில் மாம்பழ சீசன் மிகத் தீவிரமாக இருக்கும் வேளையில், ஜப்பானுக்கு மாம்பழங்களை அனுப்ப முடியாமல் போனது பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சிக்கலைச் சரிசெய்ய இந்திய தாவர தனிமைப்படுத்தல் வாரியம் அதிகாரிகள் இப்போது தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள்.
ஆலைகளில் உள்ள குறைகளைச் சரிசெய்து, ஜப்பான் அரசுக்கு ஒரு புதிய திட்ட அறிக்கையை அனுப்ப அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள். இந்தச் சிக்கல் விரைவில் தீர்க்கப்பட்டு ஜப்பான் கடைகளில் மீண்டும் இந்திய மாம்பழங்கள் விற்பனைக்கு வரும் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள்.