ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 22-ம் தேதி மீன்பிடிக்க சென்ற அந்தோணி பிரசாத் விசைப்படகையும், அதிலிருந்த மீனவர்கள் 9 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீனவர்களின் காவல் நேற்று முடிந்ததை அடுத்து மீண்டும் தலைமன்னார் நீதிமன்றத்தில் 4-வது முறையாக ஆஜர்படுத்தினர்.
மீன்வளத்துறை அதிகாரிகள் 9 மீனவர்கள் மீதும் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததன் அடிப்படையில், தலைமன்னார் நீதிமன்ற நீதிபதி, 8 மீனவர்களுக்கு தலா ரூ.72 ஆயிரம் அபராதமும், அதேபோல் இலங்கை கடற்படையால் 2வது முறை சிறைபிடிக்கப்பட்ட மீனவர் செந்தில் என்பவருக்கு ரூ.80 ஆயிரம் (இந்திய பணம்) அபராதமும் விதித்தார்.

அபராதத்தை கட்ட தவறும்பட்சத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் மீனவர்கள் பயன்படுத்திய படகுக்கான வழக்கு ஜனவரி 7-ம் தேதி விசாரிக்கப்படும். அன்றைய தினம் படகின் உரிமையாளர், உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தன் எக்ஸ் பக்கத்தில், “ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ₹5.76 லட்சம் அபராதம் விதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.