தமிழ்நாடு முதல்வராகிறார் விஜய்
கடந்த மே 4-ம் தேதியே தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. பெரும்பாலான இடங்களைப் பெற்ற தமிழக வெற்றிக் கழகத்திற்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது தவெக.
ஆக, இந்தக் கட்சிகள் எல்லாம் ஆதரவு தர, நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்.
பெரும்பான்மையை நிரூபித்ததும் நேற்று அர்லேகர் ஆட்சியமைக்க விஜயை அழைத்தார்.
இதையடுத்து இன்று தமிழ்நாடு முதல்வராகிறார் ஜோசப் C விஜய்.
இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதல்வராக பதவியேற்கிறார் விஜய்.
இந்த நிகழ்வில் பங்கேற்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி.