இபிஎஸ் தலைமையிலான கூட்டத்தைப் புறக்கணித்த ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி; தவெக-வில் ஐக்கியமாகிறாரா?

Spread the love

ஆனால், ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்ட குற்ற வழக்கொன்றில் மூன்றாண்டு சிறை தண்டனை பெற்றதால், கடந்த 2019- ஆம் ஆண்டு பாலகிருஷ்ண ரெட்டி வகித்த அமைச்சர் பதவியும் எம்.எல்.ஏ பதவியும் சட்ட ரீதியாக பறிபோனது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்து கடந்த 2024 ஆம் ஆண்டு விடுதலை பெற்றார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரக எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டார்.

கே.பி.முனுசாமி, பாலகிருஷ்ண ரெட்டி

கே.பி.முனுசாமி, பாலகிருஷ்ண ரெட்டி

இவருக்கும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமிக்கு ஒத்துவராமல் இருந்த நிலையில், அதையெல்லாம் மீறி கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஓசூர் தொகுதியைப் பெற்று வெற்றியும் பெற்றார். இது, தன் தொகுதியில் தோல்வியடைந்த கே.பி.முனுசாமி தரப்புக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்காமல் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்த வேலுமணி தலைமையிலான அணியில் இடம்பெற்றதால், இவர் வகித்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்து கே.பி.முனுசாமியின் ஆதரவாளரான எம்.ஜி.எம் ராமு நியமிக்கப்பட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *