மேக்கப் இல்லாத யதார்த்தம்
சினிமா என்றாலே அதிக மேக்கப், பளபளப்பான உடைகள் என்றிருந்த நிலையை மாற்றினார். நிஜத்தில் மக்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே திரையிலும் காட்டினார். அழுக்கு ஆடைகள், கலைந்த தலைமுடி என கதாபாத்திரங்களை அவற்றின் இயல்பிலேயே காட்டினார்.
புதுமுகங்களின் வருகை
பெரிய நட்சத்திரங்களை வைத்து மட்டுமே படம் எடுக்க முடியும் என்ற மாயையை உடைத்தார். சாதாரண தோற்றம் கொண்ட பல புதுமுகங்களை அறிமுகப்படுத்தி, அவர்களை மாபெரும் நட்சத்திரங்களாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. ராதிகா, ரேவதி, ராதா, கார்த்திக், சுஹாசினி, ரேகா என அவர் அறிமுகப்படுத்திய நட்சத்திரங்களின் பட்டியல் மிக நீளமானது.
நாடகத்தனமற்ற நடிப்பும் வசனங்களும்
நீளமான வசனங்கள், நாடகத்தனமான உச்சரிப்பு, ஓவர் ஆக்டிங் என்று இருந்த தமிழ் சினிமாவை மாற்றி, மக்கள் இயல்பில் எப்படிப் பேசுவார்களோ அதே வட்டார வழக்கையும், யதார்த்தமான நடிப்பையும் திரையில் கொண்டு வந்தார்.
சமூகப் பிரச்னைகளைத் தைரியமாகப் பேசியது
கிராமத்து அழகை மட்டும் அவர் காட்டவில்லை; அங்குள்ள இருண்ட பக்கங்களையும் தைரியமாகப் பதிவு செய்தார். சாதிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் தீண்டாமை (வேதம் புதிது), பெண் சிசுக்கொலை (கருத்தம்மா), உறவுச் சிக்கல்கள் (முதல் மரியாதை) என வழக்கமான சினிமா ஃபார்முலாக்களில் இருந்து விலகி, அழுத்தமான கதைகளைக் கையாண்டார்.