இரண்டாவது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் … ஷாக் கொடுத்த அரசு! – Kumudam

Spread the love

சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல் முதல் மனைவியைப் பிரிந்து, இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் அரசு ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட முதல் மனைவி அரசிடம் முறையிடும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் மாதச் சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் பிடிக்கப்பட்டு, அந்தத் தொகை நேரடியாக முதல் மனைவியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அரசு ஊழியர்கள் சிலர் தங்களது முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல், மற்றொரு பெண்ணுடன் வாழும் சம்பவங்கள் அரசின் கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப் போராட்டங்கள் முடிவடையும் வரை முதல் மனைவி நிதியுதவி இன்றி தவிப்பதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பணி விதிகளை மீறி செயல்படும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் சட்டப்பூர்வ நடவடிக்கையும் தொடரப்படும். அசாம் மாநிலத்தில் ஏற்கனவே பொது சிவில் சட்டப் பிரிவுகளின் கீழ் பலதார மணத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அரசு ஊழியர்களின் இரண்டாவது திருமணத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்களைத் தொடர்ந்து, தனியார் துறையில் பணிபுரிபவர்களையும் இந்த வரம்பிற்குள் கொண்டுவரச் சட்டப் பூர்வமான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் விவாகரத்து இன்றி கைவிடப்படும் பெண்களுக்குத் தேவையான நிதிப் பாதுகாப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *