’காற்று’ என்ற சிற்றிதழை நடத்திய இவர், நடிகர் கமல்ஹாசனின் ‘மையம்’ என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் உருவாக்கிய ‘மருதநாயகம்’ திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கத்தில் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். ஆயிரக்கணக்கான கலையரங்கங்கள், பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு சிறைப்புரை ஆற்றியுள்ளார். “தேடாதே, தொலைந்து போய்விடுவாய், வழிகள் மாற்றி வைக்கப்பட்டு இருக்கின்றன” என்பது கவிஞர் புவியரசு-வின் புகழ் பெற்ற வரிகள்.
ஆரம்பத்தில் ம.பொ.சி-யின் தமிழரசுக் கட்சியில் இருந்த இவர், முரண்பாடு காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளராக இருந்த இவர், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். கலை இலக்கிய செயல்பாடுகளில் ஆளுமையாக இருந்த கவிஞர் புவியரசு மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவு கலை, இலக்கிய செயற்பாட்டாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.