இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் – யார் போட்டியிடுகிறார்கள்? | Communist parties announce candidates for the two constituencies

Spread the love

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அக்டோபர் 9-ம் தேதி, பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சுகந்தி- லட்சுமணன்

சுகந்தி- லட்சுமணன்

திமுக, அதிமுக, தவெக கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன. இந்நிலையில் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துவரும் இடதுசாரி கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கின்றன.

அந்த வகையில் மதுராந்தகம் தொகுதியில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தியும், தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *