“இளையராஜாவின் பெயர் வரும் காட்சி செய்தியைக் கடத்தும் நோக்கத்திற்காகக் கையாளப்பட்ட ஒரு நிகழ்வு!” – ‘கருப்பு’ படக்குழு |”The scene featuring Ilaiyaraaja’s name was a narrative for a message!” ‘Karuppu’ Team

Spread the love

சூர்யா நடித்திருக்கும் “கருப்பு’ படத்திற்குத் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் திரிஷா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சாய் அபயங்கர் இசையில் வந்திருக்கும் இப்படத்தின் பாடல்களும் திரையரங்குகளைக் கொண்டாட்டமிக்கதாக மாற்றியிருக்கின்றன.

கருப்பு - சூர்யா

கருப்பு – சூர்யா

இப்படத்தின் ஒரு காட்சியில் ‘அலை ஓசை’ படத்தில் வரும் ‘போராடடா’ பாடலைப் பயன்படுத்தியிருப்பார்கள். அதன் பிறகு அக்காட்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பற்றிய ஒரு வசனமும் இடம்பெற்றிருக்கும்.

அந்த வசனத்தை வைத்ததற்காக படக்குழுவினரை, ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளப் பக்கங்களில் விமர்சித்தனர். இந்நிலையில் அதற்கு வருத்தம் தெரிவித்துப் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *