ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிய பின்னும், நேற்று ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டுள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணம் – இஸ்ரேல் லெபனான் மீது நடத்தி வரும் தொடர் தாக்குதலே.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் புள்ளியே – லெபனான் உள்ளிட்ட எந்த முனைகளிலும் இரு நாடுகளும் தாக்குதல் நடத்தக் கூடாது என்பது தான்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இல்லாத இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்துகிறது. இது ஈரானுக்கு பிடிக்கவில்லை. அதனால், ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடிவிட்டது.
முன்பு, போர் பாதிப்புகளை ஈடு செய்யும் என்று ஈரான் கூறி வந்தது.
“போர் நிறுத்தக் காலமான 60 நாட்களுக்கு ஹார்முஸ் நீர்ச்சந்தியில் எவ்வித சுங்கக் கட்டணமும் இருக்காது. இந்த 60 நாட்கள் முடிந்த பிறகும் கூட கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.