International
oi-Mani Singh S
மாஸ்கோ: உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட். கடந்த 2022 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்நிலையில் ரஷ்யா தனது நாட்டுக்கு எதிரான ஒரு வழக்கில் சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் முக்கிய பொறுப்பை டிஒய் சந்திரசூட்டுக்கு வழங்கியுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் போர் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரால் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல்களால் அந்த நாடு கடும் இழப்பை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் உக்ரைனின் பிரபலமான வங்கிகளில் ஒன்றாகவும் அரசு வங்கியாகவும் இருக்கக் கூடிய ஓஷட் பேங்க் (Oschadbank) ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரிஷியா ஆகிய பிராந்தியங்களில் தங்களின் வங்கி செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் இழப்பு மட்டும் இன்றி வணிக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் படையெடுப்புக்கு பிறகே இந்த இழப்பானது ஏற்பட்டுள்ளது.
எனவே, இதற்கான இழப்பீடை ரஷ்யா வழங்க வேண்டும் என்று கோரி நடுவர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 1998 ஆம் ஆண்டு ரஷ்யா- உக்ரைன் இடையே ஏற்படுத்தப்பட்ட இரு தரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தின் கீழ் பிரச்சினை விசாரிக்கப்பட உள்ளது. சர்வதேச நடுவர் தீர்ப்பாயத்தில் தற்போது மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். இந்த தீர்ப்பாயத்தில் மூன்று உறுப்பினர்கள் இருப்பார்கள். கோஸ்டா ரிக்காவை சேர்ந்த மத்தியஸ்தரும் முன்னாள் வர்த்தக அமைச்சருமான தியாள ஜிமேனேஷ் அதன் தலைவராக செயல்படுவார்.
ரஷ்யாவும் ஓஷாத்பேங்க்கும் கூட்டாக இவரை தேர்வு செய்வார்கள். இதில் மூன்றாவது நடுவராக கிரீஸ் நாட்டை சேர்ந்த மத்தியஸ்தரும் சிங்கப்பூரின் முன்னாள் தேசிய பல்கலைக்கழக பேராசிரியருமான ஸ்டாவ்ரஸ் பிரேகோலைகிஸ் என்பவரை ஒஷாத்பேங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான டிஒய் சந்திரசூட்டை ரஷ்யா இந்த தீர்ப்பாயத்திற்கு நியமனம் செய்துள்ளது. கடந்த ஆண்டு ரஷ்யாவுக்கு ஒஷாத் வங்கி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸ்க்கு ரஷ்யா எந்த பதிலும் அளிக்காததையடுத்து, தீர்ப்பாயத்தை நாடியுள்ளது.
இதற்கு முன்பாக இயற்கை எரிவாயு மற்றும் எண்னெய் உற்பத்தி நிறுவனமான விண்டர்ஷெல் டியா மற்றும் உக்ரைனின் அரசுக்கு சொந்தமான உக்ரேனெர்கா மின் நிறுவனத்திற்கு இடையேயான பிரச்சினையில், மத்தியஸ்தராக செயல்பட டி ஒய் சந்திருசூட்டிற்கு ரஷ்யா அழைப்பு விடுத்தது. ஆனால் இந்த அழைப்பை சந்திரசூட் நிராகரித்து இருந்தார்.
