நண்பர்களே, அலுவலகத்தில் தினமும் 9-டு-6 உழைக்கிறோம், சம்பளம் வருகிறது, பில் கட்டுகிறோம்… இறுதியில் கையில் மிஞ்சுவது என்ன? மாதக் கடைசியில் “அடுத்த சம்பளம் எப்போது வரும்?” என்ற ஏக்கம் மட்டுமே!
இதை மாற்ற வேண்டுமா? நாம் நினைத்த மாதிரி பண வசதி வேண்டுமா? இதற்காக திரைப்பட இண்டர்வல் பிளாக் போல நம் வாழ்விலும் திடீர் திருப்புமுனை வரும் என காத்திருக்க வேண்டியதில்லை.
கோடீஸ்வரர் ஆவது என்பது லாட்டரி சீட்டு வாங்குவது அல்ல; அது ஒரு கலை. அதை எப்படி நீங்களும் திட்டமிட்டு சாத்தியப்படுத்தலாம் என்று பார்ப்போம்.
1. பட்ஜெட்: உங்கள் பணத்தின் கமாண்டர் நீங்களே!
வீட்டில் சமையலுக்கு முன் மளிகைப் பட்டியல் போடுவது போல, உங்கள் பணத்திற்கும் ஒரு வரைபடம் தேவை. மாதம் சம்பளம் வந்ததும், முதலில் ‘தேவை’ (Needs) மற்றும் ‘ஆசை’ (Wants) என இரண்டையும் பிரியுங்கள். வருமானத்தில் 20% சேமிப்பு என்பது கட்டாயம்.
நீங்கள் வாங்கும் ஒவ்வொரு காஃபியும், ஒவ்வொரு தேவையற்ற ஆன்லைன் ஆர்டரும் உங்கள் நிதிச் சுதந்திரத்தின் ஒரு பகுதியைத் திருடுகிறது என்பதை உணருங்கள். வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற நிலையை மாற்றி, வரவை விடச் செலவைக் குறைப்பதே முதல் வெற்றி.
2. அவசர கால நிதி (Emergency Fund): ‘பஞ்சாயத்து’ வராமல் இருக்க…
பாகுபலியைக் முதுகில் குத்திய கட்டப்பா போல சற்றும் எதிர்பாராத மருத்துவச் செலவோ அல்லது வேலை மாற்றமோ வந்தால், கடன் வாங்க ஓடக்கூடாது. உங்கள் மாதச் செலவு போல 6 மடங்கு தொகையை ஒரு லிக்விட் ஃபண்டில் அல்லது சேமிப்புக் கணக்கில் ‘அவசர கால நிதி’யாகப் பிரித்து வையுங்கள். இது உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும் கவசமாகும். இது இருக்கும்போது, எந்தப் பெரிய நெருக்கடியும் உங்களை நிதி ரீதியாக முடக்காது.
3. கடன் எனும் கண்ணி: விடுபடுவது எப்படி?
கிரெடிட் கார்டு கடன் மற்றும் அதிக வட்டி வாங்கும் கடன்கள் தான் உங்கள் செல்வ வளர்ச்சியின் மெயின் வில்லன்கள். முதலில் அதிக வட்டி கொண்ட கடன்களை (Debt Avalanche முறையில்) அடைக்க முன்னுரிமை கொடுங்கள். கடனை அடைப்பதே நீங்கள் சம்பாதிக்கும் முதல் லாபம். கடனிலிருந்து விடுபட்டாலே உங்கள் வங்கி இருப்பு இயல்பாகவே உயர ஆரம்பிக்கும்.

4. முதலீடு: பணத்தை உங்களுக்காக வேலை செய்ய வையுங்கள்!
பணவீக்கம் (Inflation) என்பது அமைதியாக உங்கள் பணத்தை அரிக்கும் எறும்பு. வங்கியில் வைக்கும் பணம் பணவீக்கத்தை வெல்லாது. மியூச்சுவல் ஃபண்ட் SIP-களில் முதலீடு செய்யுங்கள்.
உதாரணத்திற்கு, மாதம் ஒரு சிறு தொகையை நீண்ட கால நோக்கில் (15+ ஆண்டுகள்) முதலீடு செய்தால், ‘காம்பவுண்டிங்’ (கூட்டு வட்டி) மூலம் அது மலைபோல வளரும். இதுதான் உங்கள் எதிர்காலத்திற்கான ‘டைம் மெஷின்’. பணத்தைச் சேமிப்பதோடு மட்டும் நிறுத்தாமல், அதை முதலீடாக மாற்றுங்கள்.
5. இலக்கு சார்ந்த திட்டமிடல் (Goal-Based Planning)
இலக்கு இல்லாமல் முதலீடு செய்யாதீர்கள். குழந்தையின் கல்வி, ஓய்வுக்காலம், வீடு வாங்குதல் என ஒவ்வொரு இலக்கிற்கும் தனித்தனி இலக்குகளை (Target-based) நிர்ணயித்து, அதற்கு ஏற்ப போர்ட்ஃபோலியோ அமைப்பதே புத்திசாலித்தனம்.
இறுதியாக:
செல்வம் சேர்ப்பது என்பது ஒரு மாரத்தான். இன்று நீங்கள் எடுக்கும் சிறு முடிவுகள், பத்தாண்டுகள் கழித்து உங்களை ஒரு ‘ஃபைனான்சியல் ஃப்ரீடம்’ நாயகி/நாயகனாக மாற்றும். “இன்று விதைக்கும் விதை, நாளை விருட்சமாகும்” – இதுதான் நிதி உலகின் தாரக மந்திரம்.
இன்றே உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள். முறையான நிதித் திட்டமிடலுடன் உங்கள் முதலீட்டுப் பயணத்தை லட்சியத்தோடு தொடங்குங்கள். உங்கள் வெற்றி உங்கள் கையில்!

உங்களை பணக்காரர் ஆக்கும் மாஸ்டர்கிளாஸ்
நீங்கள் பட்ஜெட் முதல் ரிட்டைர்மென்ட் பிளானிங் வரை அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டுமா? மியூச்சுவல் ஃபண்ட்ஸ் SIP முதல் SWP வரை அனைத்தையும் தெரிந்துகொண்டு முதலீடு செய்து வாழ்வில் முன்னேறத் துடிக்கும் நபரா?
மியூச்சுவல் ஃபண்ட்ஸ் விநியோக நிறுவனமான ‘லாபம்’ வழங்கும் ‘பணம் சேர்க்கும் கலை’ ஆன்லைன் ஒர்க் ஷாப்பில் கலந்துகொள்ளுங்கள்!
நடைபெறும் நாள்: ஞாயிறு, ஜூன் 7, 2026
நேரம்: காலை 11 -12:30 மணி
பேச்சாளர்: சிவகுமார், மேனேஜர், குவாண்டம் மியூச்சுவல் ஃபண்ட்ஸ், சென்னை
அனுமதி இலவசம். முன்பதிவு கட்டாயம். ரெஜிஸ்டர் செய்ய: https://labham.money/events/webinar-jun07-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_jun07_2026