
த.வெ.க எவ்வளவு கீழ்த்தரமாக பேச முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக பேசுகிறார்கள். தேர்தலுக்கு முன்பு டாஸ்மாக் விஷயத்தில் மோசமாக நிகழ்ச்சிகளில் பாடினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது டாஸ்மாக் விவகாரத்தில் எவற்றை கட்டுப்படுத்தி விட்டார்கள்?. டாஸ்மாக் விவகாரத்தில் தற்போதுவரை அந்த துறையின் அமைச்சர் விளக்கத்தை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்படி என்றால், அன்று பாடிய பாட்டுக்கு என்ன பதில்?.
என்னை பொறுத்தவரை த.வெ.க என்பது ரீல்ஸ் ஆட்சி, இன்னும் அவர்கள் ரீல்ஸ் மோகத்தில் தான் உள்ளார்கள். மக்களுக்கான ரியல் ஆட்சியாக இன்னும் அவர்கள் பணிகளை துவக்கவில்லை, அவர்கள் பணியை துவக்குவார்கள் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் இல்லை. தொழில்துறை அமைச்சர் ரீல்ஸ் மூலம் எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கிறார்? எவ்வளவு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகிறது? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட போகிறது? எத்தனை கோடி தமிழ்நாட்டில் முதலீடு செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்” என்றார். அண்ணாமலை புதிய கட்சி துவங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது குறித்த கேள்விக்கு, ”அதுபோன்ற தகவல் எனக்குத் தெரியவில்லை. அவர் அவ்வாறு ஆரம்பித்தால் அதை பற்றி பேசலாம்” என பதிலளித்தார்.