‘உங்கள் 3D வீரர் விடைபெறுகிறேன்.!’- ஓய்வை அறிவித்த தமிழக வீரர் விஜய் சங்கர் | Tamil Nadu cricketer Vijay Shankar announces retirement

Spread the love

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

விஜய் சங்கர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று பரிமாணங்களிலும் அசத்தக்கூடியவர் என்பதால் “3D கிரிக்கெட்டர்’ என்று அழைக்கப்பட்டார்.

தற்போது அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

விஜய் சங்கர்

விஜய் சங்கர்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில், ” கிரிக்கெட் தான் என் வாழ்க்கை. நான் 10 வயதில் விளையாடத் தொடங்கினேன். 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அனைத்துவிதமான கிரிக்கெட்டிலும் விளையாடியதை எண்ணி பெருமைப்படுகிறேன்.

நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியது எப்போதும் எனது பெருமைக்குரிய மற்றும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாக இருக்கும். நான் விரும்பியதைச் செய்ய என்னை அனுமதித்ததற்கு ‘நன்றி’ என்ற வார்த்தை மட்டும் போதாது. என்றும் நன்றியுடையவனாக இருப்பேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *