சாப்பிடும்போது முக்கியமான 3 விதிகளைக் கவனத்தில் கொள்ளவும். உணவைச் சிறிய அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
சாப்பிடும்போது இடையே சிறிதளவு தண்ணீர் குடித்துக்கொள்ளலாம்.
உணவை உண்பதில் ஒரு வரிசையைப் பின்பற்ற வேண்டும். முதலில் புரதச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். அடுத்து நார்ச்சத்து (Fiber) நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இறுதியாக கார்ப்போஹைட்ரேட் (Carbs) உணவைச் சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் உணவு, தொண்டையில் வறண்டு போவதைத் தவிர்க்கலாம்.

அதிக காரமான, அதிக சூடான அல்லது மிகவும் குளிர்ந்த உணவுகள், கார்பனேட்டடு பானங்கள் (Carbonated drinks) மற்றும் மதுபானங்கள் (Alcohol), ஒட்டும் தன்மையுள்ள பிரெட் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சாப்பிட்ட உடனே படுக்கக்கூடாது. சாப்பிட்ட பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் நேராக நிமிர்ந்து உட்கார்ந்த (Upright position) பிறகே படுக்கச் செல்ல வேண்டும்.
இவற்றை எல்லாம் பின்பற்றுவதன் மூலம் தொண்டையில் உணவு அடைக்கும் பிரச்னையைத் தடுக்க முடியும். இதையும் மீறி, பிரச்னை தொடர்ந்தால் மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.