உயிரோடிருப்பவருக்கு போலி இறப்பு சான்றிதழ்; ‘சொத்தை அபகரிக்கவா?’ – மூதாட்டி புகாரின் பின்னணி என்ன? | madurai woman complaint seeking action over fake death certificate issued

Spread the love

மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடி முனியாண்டி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பிள்ளை இவரது கணவர் மூர்த்தி சில ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் தனது இரண்டு மகன்கள் மருகளுடன் வசித்து வந்துள்ளார்.

இவரது இளைய மகன் பெருமாளுக்கும் அவரது மனைவி சுந்தரி என்பவருக்கும் விவகாரத்து வழக்கு நிலுவையில் இருந்துவந்த நிலையில் பெருமாள் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து மூர்த்தியின் பெயரில் வங்கியில் அடகு வைத்திருந்த நகையை மீட்பது தொடர்பாக முத்துப்பிள்ளை கேட்டபோது வங்கி அதிகாரிகள் முத்துப்பிள்ளை உயிரிழந்துவிட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த முத்துப்பிள்ளை வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது பெருமாளின் மனைவி சுந்தரி பெயரில் முத்துப்பிள்ளை இறந்தவிட்டதாகக் குறிப்பிட்டு வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அதில் பூரண சந்திரன், பாண்டிச்செல்வி, முனீஸ்வரி, தமிழ்செல்வி வேல்முருகன் பிச்சையம்மாள் ஆகியோரின் சாட்சி கையெழுத்துடன் கிராம நிர்வாக அலுவலர் பெயரில் வழங்கியுள்ளனர்.

இது குறித்து முத்துப்பிள்ளை விஏஓ அலுவலகத்திற்குச் சென்று விஏஓ மற்றும் கிராம அலுவலக உதவியாளர் ஆகியோரிடம் கேட்டுள்ளார்.

முத்துப்பிள்ளை

முத்துப்பிள்ளை

அப்போது இதனை யாரிடமும் சொல்ல வேண்டாம் எனக் கூறி அவரை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து அங்கு பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக சுந்தரி மீது மட்டும் புகார் அளிக்க வேண்டும் மற்றவர்களுக்கு இதில் தொடர்பு இல்லை எனக் கூறி கடிதம் எழுதி வாங்கியுள்ளனர்.

இந்த நிலையிலும் தனது மகனுக்குச் சொந்தமான நிலம் மற்றும் நகைகளை அபகரிப்பதற்காகச் சிலர் தூண்டுதலின் பேரில் தன்னை உயிரிழந்து விட்டதாக இறப்புச் சான்றிதழ் கொடுத்து ஏமாற்றிவிட்டனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் தனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டதாகக் கூறி முத்துப்பிள்ளை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து குறைதீர்க் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணாவைச் சந்தித்து மனு அளித்ததோடு அவரது காலில் விழுந்து எப்படியாவது இதன் மீது நடவடிக்கை எடுங்கள் எனக் கூறினார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *