ஆடாதோடை மணப்பாகு டெங்குவால் ஏற்படும் சில உபாதைகளைக் குறைக்க உதவுகிறது. கஷாயம் போன்ற திரவ மருந்துகள் (diluted medicines) விரைவில் உடலில் உறிஞ்சப்பட்டு (absorption) வேகமாகச் செயல்படும் என்பதால் நோயாளிகளுக்கு விரைவான நிவாரணம் கிடைக்கும்.
காய்ச்சலின் போது, மேற்குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக்கொள்வதுடன் கஞ்சி போன்ற திரவ ஆகாரங்களை (fluids) நோயாளிகளுக்குத் தொடர்ந்து கொடுத்துவந்தால், உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடுசெய்ய முடியும்.

பப்பாளி இலைச்சாறு நல்லது என்றாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுக்காமல், சுமார் 10 முதல் 20 மில்லி வரை மட்டுமே குடிக்க வேண்டும்.
உடலில் ஏற்கெனவே நீரிழப்பு இருக்கும்போது, பப்பாளி இலையின் கடும் கசப்பினால் வாந்தி ஏற்பட்டு மேலும் தொந்தரவாகிவிடக் கூடாது.
மருத்துவர் பரிந்துரைக்கும் அளவில் குறைவாகக் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது நாட்டுச் சர்க்கரையோ பனங்கற்கண்டோ சேர்த்துக் கொள்ளலாம். இருப்பினும் கசப்பு முழுமையாகப் போகாது. வாந்தி வராமல் பார்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
டாக்டர் விக்ரம் குமார்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவப் பிரிவில் சித்த மருத்துவராகப் பணிபுரிபவர். சித்த மருத்துவத் துறையில் 16 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்