மத்தியப் பிரதேச மாநிலம், ததியா பகுதியைச் சேர்ந்த கிரிஜா சங்கர், `மாயாராம் என்பவர் தனது மனைவியையும் மகளையும் கடத்திச் சென்று சட்டவிரோதமாகப் பிணைக் கைதிகளாக வைத்துள்ளார்” என குவாலியார் உயர் நீதிமன்றத்தில் ‘ஆட்கொணர்வு’ மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண்ணைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
போலீசார் அந்தப் பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, வழக்கு முற்றிலும் புதிய திருப்பத்தைப் பெற்றது. நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்த அந்தப் பெண், “என்னை யாரும் கடத்தவில்லை. நான் எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே எனது மைத்துனரான (தங்கையின் கணவர்) மாயாராமுடன் வாழ்ந்து வருகிறேன்.
எனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி ஏற்கனவே மனு தாக்கல் செய்துவிட்டேன். இனிவரும் காலங்களில் எனது மைத்துனருடனேயே வாழ விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்த வழக்கில் மற்றொரு ஆச்சரியமாக, மாயாராமின் மனைவியான இளைய சகோதரியும் நீதிமன்றத்தில் ஆஜராகி, “எனது அக்கா எனது கணவருடன் வாழ்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.