
கோவை இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக நீண்ட காலமாக விடுதலை சிறுத்தைகள் இயக்கம் வலியுறுத்துகிறது. இஸ்லாமிய சிறைவாசிகளின் குடும்பத்தினர், பல்வேறு அமைச்சர்களை சந்தித்து மனுக்கள் கொடுத்திருக்கிறார்கள். முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். எத்தனை பேரை விடுதலை செய்யலாம் என்ற லிஸ்ட் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள், விடுதலை விரைவில் இருக்கும். இரட்டைக் குவளை விவகாரம் தொடர்பாக திராவிட இயக்கங்கள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். இரட்டைக் குவளை முறை எங்காவது இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சொல்லியிருக்கின்றார். தீண்டாமையை கடைப்பிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பழங்குடி மக்களின் வாழ்வாதாரம், அவர்களின் தேவைகள் கோரிக்கைகள் குறித்து மலைப்பகுதியாக சென்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதுவரை எந்த அமைச்சரும் மலைப்பகுதிகளுக்கு சென்றது கிடையாது. நாங்கள் நேரடியாக சென்று கேட்டுக்கொண்டு இருக்கிறோம். சிறப்பு கவனம் எடுக்கும் அரசாக இருக்கும். அண்ணன் வைகோ அவர்களை எப்பொழுதும் நேசிக்க கூடியவர்கள் நாங்கள். அவர் எங்கள் மீது எந்த விமர்சனம், அவதூறு பரப்பினாலும் அவரை நாங்கள் நேசித்துக் கொண்டே இருப்போம்” என்றார்.