எஸ்.பி.வேலுமணியை ’துரோகி' என்ற அதிமுக தொண்டர் – பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் பரபரப்பு!

Spread the love

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் சரஸ்வதி அம்மாள், கடந்த மே 16ம் தேதி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சி திப்பம்பட்டி பகுதியில் உள்ள பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்தார்.

எஸ்.பி. வேலுமணி
எஸ்.பி. வேலுமணி

இதற்கு முன்னதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், கந்தசாமி உள்ளிட்டோர் அவரது வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்தனர். இதனிடையே எஸ்.பி.வேலுமணி வந்த போது, கூட்டத்தில் இருந்த அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் ‘துரோகிங்க அண்ணா இவனுக எல்லாம்’ என குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் எஸ்.பி.வேலுமணியின் முகம் மாறிய நிலையில், டென்ஷனான பொள்ளாச்சி ஜெயராமன் இதுபோல பேசக் கூடாது என கடிந்து கொண்டார். குரல் எழுப்பிய தொண்டரை கட்சியினர் அங்கிருந்து வெளியேற்றினர். இதன் காரணமாக பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *