விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலம்ப விளையாட்டில் சிறந்து விளங்கும் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிக்கும் விழா இன்று காலை தொடங்கியது. இந்த விழாவுக்காக மேடையில் அமைக்கப்பட்டுள்ள பேனரில் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்குபவர்கள் எனக் குறிப்பிட்டது.

அதன் கீழ் தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
விழா மேடைக்கு வந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, “இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் என்னுடைய பெயர்தானே முதலில் இருக்க வேண்டும். ஏன் அமைச்சர் கீர்த்தனாவின் பெயரை முதலில் போட்டுள்ளீர்கள்?