“ஒரு பதிவுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?” – சங்கராம் பாட்டீல் | Dr Sangram Patil BJP facebook post case

Spread the love

பாஜகவின் மகாராஷ்டிரா மாநில சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் நிகில் பாம்ரே என்பவர் அளித்த புகாரின் பேரில், கடந்த டிசம்பர் 18, 2025 அன்று இந்த முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. ஒரு தலைவர் மீதான சர்வதேச ஊழல் குற்றச்சாட்டு குறித்து நிலவும் மௌனம் பற்றி கேள்வி எழுப்பும் ஒரு பதிவும், ‘ஷெஹர் விகாஸ் அகாதி’ என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்ட மற்றொரு பதிவும் இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால், அந்த ‘ஷெஹர் விகாஸ் அகாதி’ என்ற பக்கத்துடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பாட்டீல் மறுத்துள்ளார்.

இந்த அனுபவத்திற்குப் பிறகு, அந்தப் பதிவிட்டதற்காக வருந்துகிறீர்களா என்ற கேள்விக்கு, “இல்லை, அப்படி நான் உணரவில்லை. ஏனெனில் அந்தப் பதிவு ஒரு குற்றமல்ல. பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு 353 (2), அதாவது மத, இன, சமூகக் குழுக்களிடையே பகைமையை உருவாக்கும் பதிவுகளை வெளியிடுவது தொடர்பான சட்டப்பிரிவு என் பதிவுக்குப் பொருந்தாது. எனது பதிவு எந்தவொரு சமூகத்தையும் குறிவைக்கவில்லை; அதில் வெறுப்புப் பேச்சு எதுவும் இல்லை,” என்று உறுதியாகக் கூறுகிறார்.

ஜனவரி 10 அன்று அதிகாலை 2:30 மணியளவில் தனது மனைவியுடன் இங்கிலாந்திலிருந்து மும்பை வந்திறங்கியபோது, குடிவரவு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர். “உங்கள் மீது ஒரு வழக்கு உள்ளது, காவல்துறை வரும் வரை காத்திருக்கவும்” என்று கூறியபோது அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறியுள்ளார். அன்று மாலை 6 மணி வரை குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். ஜனவரி 19 அன்று அவர் திரும்பிச் செல்ல இருந்த நிலையில், ஜனவரி 16 அன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார். விசாரணை முடிந்ததும் லுக் அவுட் நோட்டீஸ் நீக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டும், விமான நிலையத்தில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

“கடைசியாக ஜனவரி 21, 2026 அன்றுதான் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு எந்த விசாரணையும் இல்லை. என்னை இங்கே வைத்திருப்பதன் நோக்கம் என்ன? விசாரணை நடத்துங்கள் அல்லது என்னைச் செல்ல அனுமதியுங்கள் என்று கூறி காவல்துறைக்கு சுமார் 15 முறை மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால் எந்தப் பதிலும் இல்லை,” என்று தனது விரக்தியை வெளிப்படுத்தினார் பாட்டீல்.

இறுதியாக, நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை காலை அவர் இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். விமான நிலையத்தில் சில சோதனைகளுக்குப் பிறகு அவர் பயணிக்க அனுமதிக்கப்பட்டார். செவ்வாய் இரவு அவர் இங்கிலாந்தில் உள்ள தனது இல்லத்தை அடைந்து, தனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *