சாதாரண மாம்பழங்களைப் போல மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இல்லாமல், இந்த மாம்பழங்கள் அடர் ரூபி-சிவப்பு நிறத்தில் பளபளப்பாக இருக்கும். பார்க்கப் பழம் போலவே தெரியாது, ஏதோ பட்டை தீட்டப்பட்ட ரத்தினக் கற்களைப் போல காட்சியளிக்கும். இதன் வழவழப்பான தோல் மற்றும் வித்தியாசமான வடிவத்தால், பலர் இதை டைனோசர் முட்டைகளுடன் ஒப்பிடுகின்றனர்.
ஆனால், உண்மையான ஆச்சரியம் பழத்தை வெட்டும்போதுதான் தொடங்குகிறது. அடர் சிவப்புத் தோலுக்குள், மென்மையான, கிரீமியான, சாறு நிறைந்த, முற்றிலும் நார் இல்லாத தங்க நிற சதைப்பகுதி இருக்கும். மற்ற மாம்பழ வகைகளைப் போல இல்லாமல், இதன் பட்டுப் போன்ற தன்மை வாயில் வைத்ததுமே கரைந்துவிடும். ஒரு பழம் பிரீமியம் தரத்திற்குத் தகுதி பெற வேண்டுமானால், அதில் குறைந்தபட்சம் 15% சர்க்கரை அளவு இருக்க வேண்டும். அந்த அளவுக்கு இதன் இனிப்பு அலாதியானது.
ஏன் இவ்வளவு விலை?
மியாசாகி மாம்பழங்கள் கிடைப்பதற்கு அரிது என்பதால் மட்டும் விலை உயர்ந்தவை அல்ல. அவற்றை வளர்ப்பதற்குப் பின்னால் இருக்கும் நம்ப முடியாத கவனிப்பு, உழைப்பு மற்றும் பொறுமைதான் அதன் விலைக்கு முக்கியக் காரணம்.
இந்த மாம்பழங்கள் திறந்த பண்ணைகளில் இல்லாமல், வெப்பநிலை, சூரிய ஒளி மற்றும் ஈரப்பதம் என அனைத்தும் கவனமாகக் கட்டுப்படுத்தப்படும் பசுமைக் குடில்களுக்குள் (greenhouses) வளர்க்கப்படுகின்றன.
மரம் தனது முழு சத்தையும் ஒரு சில பழங்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதற்காக, விவசாயிகள் செடியிலிருந்து சுமார் 80% பூ மொட்டுகளைக் கிள்ளி எறிந்து விடுகிறார்கள். இதனால்தான், விளையும் பழங்கள் சாதாரண மாம்பழங்களை விடப் பெரியதாகவும், அதிக சாறுடனும், கூடுதல் இனிப்புடனும் உருவாகின்றன.