கடந்த 2025 ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் எல்லையைக் கடந்து இந்தியா “ஆபரேஷன் சிந்துார்’ என்ற பெயரில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
இந்த ராணுவ நடவடிக்கை மே 10 அன்று முடிவுக்கு வந்த நிலையில், அடுத்த ஐந்தாவது நாளே பாதுகாப்பு காரணங்களுக்காக துருக்கியின் செலிபி நிறுவனத்திற்கான அனுமதியை இந்திய அரசு ரத்து செய்தது.

இந்தியா – துருக்கி உறவில் விரிசல்:
இந்த மோதலின் போது துருக்கி அரசு பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, இந்தியாவின் தாக்குதலைக் கடுமையாக விமர்சித்தது.
மேலும், இப்போரில் பாகிஸ்தான் துருக்கி தயாரிப்பு ட்ரோன்களைப் பயன்படுத்தியதாகத் தகவல்கள் வெளியானதால் இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டது.
இதனால் இந்தியப் பொதுமக்கள் மத்தியில் துருக்கியப் பொருள்கள் மற்றும் நிறுவனங்களைப் புறக்கணிக்கும்படி கடுமையான எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.