“ஒவ்வொரு முறையும் ஜாமீன் வழங்க முடியாது” – உமர் காலித் ஜாமீன் மனுவை மீண்டும் நிராகரித்த நீதிமன்றம்! | A Delhi court has dismissed Umar Khalid’s bail plea.

Spread the love

ஒவ்வொரு புதிய ஜாமீன் மனுவையும் அதன் தகுதியின் அடிப்படையிலேயே நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும். அதற்கான காரணங்கள் நியாயமானதாக இருக்கும்போது மட்டுமே ஜாமீன் அனுமதிக்கப்பட வேண்டும். மாமாவின் மரணச் சடங்கில் பங்கேற்பது என்பது அத்தியாவசியமானது அல்ல. ஒருவேளை அந்தச் சடங்கு விண்ணப்பதாரருடன் நெருங்கிய ரத்தத் தொடர்பு கொண்ட ஒருவருடையதாக இருந்திருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். மேலும், அந்த உறவு அவ்வளவு நெருக்கமானதாக இருந்திருந்தால், மாமா இறந்த சமயத்திலேயே விண்ணப்பதாரர் ஜாமீன் கோரியிருக்க வேண்டும்.

டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லி உயர் நீதிமன்றம்

அதை விடுத்து, இவ்வளவு நீண்ட நாள்களுக்குப் பிறகு இப்போது ஜாமீன் கேட்பது நியாயமானதாகத் தெரியவில்லை. விண்ணப்பதாரரே தனக்கு ஐந்து சகோதரிகள் இருப்பதாகக் கூறியுள்ளார். அவர்கள் அருகில் வசிக்கவில்லை என்றாலும், தாயாரின் உதவிக்கு அவர்கள் நிச்சயம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விண்ணப்பதாரரின் தந்தையும் அங்குதான் இருக்கிறார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறியபடி, இந்த அறுவை சிகிச்சை என்பது கட்டிகளை அகற்றுவதற்கான ஒரு எளிய சிகிச்சை முறை மட்டுமே. எனவே, இதற்கு விண்ணப்பதாரரின் நேரடி உதவி எதுவும் தேவைப்படுவதாகத் தெரியவில்லை” என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.

சில தினங்களுக்கு முன்புதான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உமர் காலித் உள்ளிட்டோருக்கு ஜாமீன் மறுக்கப்படுவது குறித்து விமர்சித்திருந்த நிலையில், மீண்டும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டிருப்பது விவாதமாகியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *