முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் வைக்க வேண்டும் என அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இதேபோல பல்வேறு பகுதிகளிலும் அரசு அலுவலகங்களில் முன்னாள் முதலமைச்சர்கள் புகைப்படங்கள் வைப்பது தொடர்பாகப் பிரச்னைகள் ஏற்பட்டு வந்தன.

இந்த நிலையில் இன்று நடந்த மாமன்றக் கூட்டத்தின்போது முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படப் பிரச்னைகளைத் தவிர்க்கும் வகையில், முன்னாள் முதலமைச்சர்கள் பலரின் புகைப்படங்களும் கூட்ட அரங்கில் வைக்கப்பட்டு இருந்தன.
முதலமைச்சர் விஜய் புகைப்படத்தின் அருகே முன்னாள் முதலமைச்சர்கள் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி புகைப்படமும், வலப்புற சுவரில் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களும், இடப்புற சுவரில் ஓமந்தூர் ராமசாமி, காமராஜர், பக்தவச்சலம், ராஜாஜி மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர் புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தன.
அதேசமயம் முன்னாள் முதலமைச்சர்கள் ஜானகியம்மாள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் படங்கள் இடம்பெறவில்லை. முன்னாள் முதலமைச்சர்கள் புகைப்படம் வைக்கும் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது.