“கடந்த ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து’ – முதல்வர் விஜய் அறிவிப்பு |The CM has announced that the cases against farmers and teachers are being dropped under Rule 110.

Spread the love

தமிழ்நாட்டில் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 2021 மே மாதம் முதல் 2026 ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தில், தங்களது நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது முந்தைய ஆட்சியாளர்களால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

இந்த முடிவின் மூலம் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு இந்த அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும் என்பது மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்த சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான வழக்குகள் மற்றும் சில விவசாயிகள் மீது பிரயோகிக்கப்பட்ட குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *