5. ஏஜென்ட்டுகளை மாற்றினாலோ, பணி நீக்கம் செய்தாலோ, அது குறித்து கடன் பெற்றவர்களுக்கு வங்கிகள் தெரிவிக்க வேண்டும்.
6. வங்கிகள் ஏஜென்ட்டுகளின் போன் கால்களை ரெக்கார்ட் செய்ய வேண்டும். குறைந்தது ஆறு மாதங்களுக்கு அந்த போன் கால் ரெக்கார்டிங்கை வங்கிகள் மெயின்டெயின் செய்ய வேண்டும்.
7. கடன்களைத் திரும்ப வசூலித்தால் ஏஜென்ட்டுகளுக்கு இன்சென்டிவ் வழங்கப்படுவது இனி ரத்து.
8. கடன் பெற்றவர்களின் பொருள்கள் அல்லது சொத்துகளை பறிமுதல் செய்யப்படுவதற்கான பாதுகாப்பான நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
9. கடன் பெற்று மொபைல் போன், டேப்லெட், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவை வாங்கப்பட்டிருந்து, அதன் தவணைகளை 90 நாள்களுக்கு மேல் கட்டவில்லை என்றால் தான், அந்த சாதனத்தை வங்கிகள் ‘disable’ செய்ய வேண்டும்.
10. ஒரு சாதனத்தை Disable செய்வதற்கு முன்பு, 21 நாள்கள் + ஏழு நாள்கள் நோட்டீஸ் வழங்க வேண்டும்.
11. ஒரு சாதனம் தவறாக பிளாக் செய்யப்பட்டால், கடன் பெற்றவர்களுக்கு ஒவ்வொரு மணிநேரத்திற்கும் வங்கிகள் ரூ.250 வழங்க வேண்டும்.
12. ஏஜென்ட்டுகள் கடன் வசூலிக்க செல்லும் போது ஐ.டி மற்றும் அங்கீகார கடிதத்தை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.