`கர்நாடக முதல்வரை அழைத்து வந்து டெல்டா வறட்சியை, முதல்வர் விஜய் காட்ட வேண்டும்’ – பி.ஆர்.பாண்டியன்

Spread the love

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சிவக்குமாருடன் பேச்சுவார்த்தைக்கு தமிழக முதல்வர் விஜய் செல்வேன் எனச் சொல்வது தமிழக நலனுக்கு எதிரானது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் நடவடிக்கையாகும். முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு வரும் போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட ஏற்பாடு செய்துள்ளோம் என கர்நாடக முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். அப்படி என்றால், கர்நாடகா சென்றுவிட்டு, முதல்வர் விஜய் திரும்பும்போது, கர்நாடக முதல்வர் சிவக்குமாரையும் அழைத்து வந்து காவிரி டெல்டாவில் வறண்டு கிடக்கும் பாசனப் பகுதிகளைப் பார்வையிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மயிலாடுதுறை எம்.பி சுதாவின் கேள்விக்கு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல், மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு எந்த அனுமதியும் அளிக்க முடியாது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளனர். ​கடந்த, ஜூன் 24ம் தேதி, மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம் பிரசாத், நீர்வள ஆணையத்தில் மேகதாது அணைக்காக பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள யோகேஷ் பாட்டன்கர் ஆகிய இருவரையும் சந்தித்து, காவிரி மேலாண்மை ஆணையம் 2022-ம் ஆண்டு, கர்நாடகா அரசின் மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பிவிட்டது. இதனை மத்திய நீர்வள ஆணையம் நிராகரிக்காமல் இருப்பில் வைத்து இருப்பதால்தான் கர்நாடகாவுக்கும், தமிழகத்துக்கும் தொடர்ந்து மோதல் ஏற்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *