கார் விவகாரம்: “வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளும் மலைப்பாதை டிரைவர்.!”- துரைமுருகன் சாடல்| Durai Murugan has criticized the TVK government over the issue of providing cars to MLAs

Spread the love

எடுத்துக்காட்டாக, இதன் பொருளாதாரப் பின்னணி என்ன, இதன் செலவினம் என்ன, அரசின் மொத்த பட்ஜெட் என்ன என்பதையெல்லாம் சாதாரண மக்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை ‘கார்’ என்பது பெரிய விஷயம். தனக்குக் கிடைக்காமல் மற்றவர்களுக்கு அரசிடமிருந்து அது கிடைப்பதை மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்தப் புரிதல் இல்லாமல், சாதாரண ஒரு விஷயத்தை சின்னாபின்னமாக்கியிருக்கிறது.

நமக்கெல்லாம் இருக்கும் பயம் ஒன்றே ஒன்றுதான்.

ஒரு நிர்வாக அனுபவமும் இல்லாமல், எந்தப் புரிதலும் இல்லாமல், இவ்வளவு பெரிய வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்த நாட்டை இவர்கள் கையில் ஒப்படைத்திருக்கிறோம்.

மேல்நோக்கிச் செல்ல வேண்டிய ஒரு வாகனம் தட்டுத் தடுமாறி அதே இடத்தில் நின்று, அதன்பிறகு பாதாளத்தை நோக்கி விரைந்து வந்துவிட்டால், மீண்டும் அதை மேல்நோக்கிச் செலுத்துவது எவ்வளவு கடினமோ, அதேபோல்தான் தமிழ்நாட்டுக்கும் நடந்திருக்கிறது.

ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் விரைந்து சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தை ஒப்படைத்திருக்கிறோம்.

அவரைச் சுற்றி நின்று ஓட்டுவதற்கு ஆலோசனைகள் சொல்கிறார்கள். சரியாகச் சொல்கிறார்களா, சரியாகச் சொல்லாமல் இருக்கிறார்களா, யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்று தெரிந்துகொள்வதற்குள் ஐந்தாண்டுகள் முடிந்துவிடும். வண்டி பல நூறு கிலோமீட்டர் பின்னால் வந்துவிடும்.

இது ஒரு எளிதான ஒரு புரிதல்தான், செங்குத்தான வளர்ச்சிப் பாதையில் இறங்குவது மிக மிகச் சுலபம். ஏறுவது மிக மிகக் கடினம். நாம் வேகமாக இறங்கிக்கொண்டிருக்கிறோம். காலமே, நீ ஓர் அதிசயப் பெட்டகம்! என்னென்ன அதிசயங்களை வைத்திருக்கிறாயோ தெரியவில்லை! ” என்று சாடியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *