காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் |Cauvery Water Dispute: DK Shivakumar Chairs All-Party Meeting

Spread the love

காவிரி நீர் பகிர்வு விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையில் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், “மாநிலத்தின் நலன் மற்றும் விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதே அரசியலை விட மிகவும் முக்கியமானது.

மாநிலத்தின் நலன் சார்ந்த பிரச்னைகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்பதுதான் கர்நாடகாவின் பாரம்பரியம்.

எப்போதுமே குடிநீர் தேவைகளுக்கு முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்பதே நமது அரசின் உறுதியான நிலைப்பாடு. இந்த முடிவில் நீங்கள் அனைவரும் என்னோடு முழுமையாக உடன்படுவீர்கள் என்று நம்புகிறேன்.” எனக் கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *