1964 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து, சிறப்பான கைவினைத்திறன், காலத்தால் அழியாத வடிவமைப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் நீண்டநாள் நம்பிக்கைக்காக அறியப்படுகிறது. தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தின நகைகளின் பிரத்யேக கலெக்ஷன்களுடன், தென்னிந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள மொத்தம் 65-க்கும் மேற்பட்ட ஷோரூம்கள் மூலம், உண்மைத்தன்மை, புதுமை மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் உறுதியாக இருந்து, பல தலைமுறைகள் கடந்தும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறது.
இந்த உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது ‘கோல்டு எக்ஸ்சேஞ்ச் மேளா’வை அறிவித்துள்ளது. இந்த முயற்சியின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய தங்கத்தை மாற்றி, இந்தியாவின் வலுவான எதிர்காலத்தை உருவாக்கும் பெரிய மாற்றத்தின் ஒரு பகுதியாக இணைய அழைக்கப்படுகிறார்கள்.
குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் நடைபெறும் இந்த சிறப்பு சலுகையின் கீழ், பழைய தங்க மாற்றத்திற்கு கிராமிற்கு கூடுதலாக ரூ.150 வழங்கப்படுகிறது. இதனால், திருமண விழாக்கள் மற்றும் சிறப்பு தருணங்களுக்காக தங்களின் பழைய நகைகளை புதிய அழகிய வடிவமைப்புகளாக மாற்றிக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
ஏற்கனவே இலட்சக்கணக்கான இந்தியர்கள் ஜிஆர்டி ஜூவல்லர்ஸில் தங்களின் பழைய தங்கத்தை மாற்றி வருவதால், இந்த முயற்சி நாட்டின் தங்க இறக்குமதி சார்பை குறைத்து, நிலையான தங்க பொருளாதாரத்தை உருவாக்கும் கூட்டுப்பயணமாகவும் அமைகிறது.