இந்த நிலையில்தான் கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 45 வயதடைய பெண், மாடுகளை கட்டுவதற்காக தன் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு மது போதையில் வந்த ஓசூர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தை இயேசு என்பவர், அபெண்ணின் முன் தன் ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண், அங்கிருந்து செல்ல முயன்றபோது அவர் கையை பிடித்து இழுத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். இதனால் பதறிய அப்பெண் தன்னை காப்பாற்றும்படி கதறியுள்ளார்.
அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு உடற்கல்வி ஆசிரியர் குழந்தை இயேசுவை தாக்கியுள்ளனர். பின்பு அஞ்செட்டி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்து அங்கு வந்த காவல்துறையினரிடம் ஆசிரியரை ஒப்படைத்தனர்.
பின்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து உடற்கல்வி ஆசிரியர் குழந்தை இயேசுவை காவல்துறை கைது செய்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.