சிறு குழந்தையாக இருந்தபோதே, 2004-ம் ஆண்டு 94 குழந்தைகளின் உயிரைப் பறித்து, தமிழ்நாட்டின் வரலாற்றில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திய கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் கோர நாடகத்தை அவர் நேரில் கண்டார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே அந்தத் துயரத்தின் பாதிப்புகளை நேரில் பார்த்த எனக்கு, இன்று அவரது சகோதரருடன் அவரைச் சந்தித்தது மிகவும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
ஏராளமான சவால்களுக்கு மத்தியிலும், ஜெனிபர் தனது கல்வியை விடாமுயற்சியோடும் குறிக்கோளோடும் தொடர்ந்து, TNPSC குரூப்-1 தேர்வில் Class 1 வெற்றியைப் பெற்று, தற்போது மதிப்புமிக்க “ஊராட்சிகள் உதவி இயக்குநர்’ (Assistant Director of Panchayats) பணியிடத்தைப் பெற்றுள்ளார்.
துன்பங்கள் ஒருவரது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில்லை என்பதற்கு அவரது கதை ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாகும். அவர் பொதுச் சேவையில் ஒரு நிறைவான வாழ்க்கையைப் பெறவும், தனது பணியின் மூலம் சமூகத்திற்குப் பங்களித்து அனைத்து வெற்றிகளையும் குவிக்கவும் எனது வாழ்த்துகள்.
துயரத்திலிருந்து வெற்றிக்கு மீண்டெழும் திறன், நம்பிக்கை மற்றும் சேவையின் ஊக்கமளிக்கும் பயணம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.