இதனைத் தொடர்ந்து, ‘பானா காத்தாடி’ படத்தின் இயக்குநரான என் தந்தை இது தொடர்பாக நிறைய விஷயங்கள் சொன்னார். இந்த முயற்சிக்கு முதல் விதையிட்டதே அவர்தான். அவர் நினைத்திருந்தால் இதைத் தடுத்திருக்கலாம்; ஆனால், “நன்றாகச் செய்வோம்” என்று ஊக்குவித்துத் தொடங்குவதற்குக் காரணமாக இருந்தார். அவருக்கும் சிறு வயதில் இதுபோன்ற ஒரு குழுவை உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், அதை நான் செய்வதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் கூறினார். எனக்கு இதில் லாபம் ஈட்டுவது முக்கியமல்ல. திரைப்பட உருவாக்கத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே என் நோக்கம். மக்கள் ஒருவரையொருவர் சந்தித்து, கலந்துரையாடி, திரைப்படங்களை உருவாக்க இது ஒரு நல்ல தளமாக அமையும்.

நான் எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரியில் பி.எஸ்சி விஸ்காம் (முடித்துவிட்டு, தற்போது லயோலா கல்லூரியில் எம்.எஸ்சி விஸ்காம் படித்துக்கொண்டிருக்கிறேன். சில குறும்படங்களை இயக்கியுள்ளேன். இதுதவிர சில டிஜிட்டல் ஊடகங்களில் பயிற்சி பெற்றிருக்கிறேன். தற்போது படித்துக்கொண்டிருக்கிறேன், எதிர்காலத்தில் ஒரு திரைப்பட இயக்குநராக உருவெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.” எனப் பகிர்ந்தார்.