தற்போது தமிழில் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் வீக் எண்ட் எபிசோட் ஒன்றில், பிக்பாஸ் தமிழ் தொகுப்பாளர் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நாற்காலி குறித்துப் பேசியிருந்தார்.
அவர் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயைத்தான் சாடுகிறார் என்று சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதிக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்டுகள்.

விஜய் சேதுபதி மேடையில் பேசும் போது, “சஞ்சய் பிறந்தநாளுக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்லியிருந்தேன். அப்போ, அவர் (விஜய்) எனக்கு போன் பண்ணி, ‘ரொம்ப நன்றி நண்பா. அவன் ரொம்ப சந்தோஷமா இருந்தான்’னு சொன்னார். நான் அதை எதிர்பார்க்கவே இல்லை.
ஏன்னா, அவரே ஒரு பெரிய சூப்பர் ஸ்டார். அவர் மகன் சஞ்சய்க்கு என்னைப் பிடிச்சிருக்குங்கறது எனக்குப் பெரிய ஆச்சர்யம்.
நான் அவனிடமே கேட்டேன். ‘என்னடா உன் வீட்டிலேயே எவ்வளவு பெரிய ஆள் வச்சிருக்க’னு.