குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

Spread the love

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்ற அந்தச் சிறுமியை, மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதில் அந்தச் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து மருத்துவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அந்தச் சிறுமியிடம் விசாரணை செய்தனர். அப்போது புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் திருமணம் செய்வதாகக் கூறி சிறுமியை காதலித்ததும், அதில் கர்ப்பமானதால் அவரை குழந்தைத் திருமணம் செய்ததும் தெரிய வந்தது. அதனால் ரவீந்திரன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர் போலீஸார்.

குழந்தை திருமணம்

குழந்தை திருமணம்

அதேபோல விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது, மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதையடுத்து மருத்துவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், விருத்தாசலம் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் தலைமையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் 28 வயதான ராஜா என்பவர் சிறுமியை காதலிப்பதாகக் கூற, அதற்கு அவரும் சம்மதித்திருக்கிறார். அதையடுத்து சிறுமியை குழந்தைத் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. அதனால் ராஜா மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர் போலீஸார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *