கேரளம்: மகளிர் இலவச பஸ் பயணம், முதியோருக்கு சிறப்பு துறை – புதிய முதல்வர் வி.டி.சதீசன் அறிவிப்பு!

Spread the love

பதவியேற்பு விழாவில் வி.டி.சதீசன்

பதவியேற்பு விழாவில் வி.டி.சதீசன்

முதியோர்களுக்கென ஒரு சிறப்புத் துறையை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. நாட்டில் முதியோர்களுக்கென ஒரு சிறப்புத் துறை செயல்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்றும் வி.டி.சதீசன் கூறினார். ஆஷா பணியாளர்களின் மதிப்பூதியம் ரூ.3,000 உயர்த்தப்பட்டுள்ளது. ஆஷா பணியாளர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக அவர்களின் மதிப்பூதியத்தில் 3000 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும், இதன் மூலம் ஆஷா பணியாளர்களின் மாதச் சம்பளம் 9000 ரூபாயிலிருந்து 12000 ரூபாயாக உயரும் என்றும் முதலமைச்சர் வி. டி.சதீசன் தெரிவித்தார். அங்கன்வாடிப் பணியாளர்களின் சம்பளம் ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது. சத்துணவு பணியாளர்களின் சம்பளமும் ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது. மழலையர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் குழந்தைப் பராமரிப்பாளர்களின் சம்பளமும் ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *