இந்த நிலையில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “முன்னாள் கேரள முதலமைச்சர் தோழர் பினராயி விஜயன் அவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள அமலாக்கத்துறை சோதனைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். மத்திய புலனாய்வு அமைப்புகள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்து வருவதை இத்தகைய நடவடிக்கைகள் மீண்டும் ஒருமுறை தீவிர கவலையோடு வெளிப்படுத்துகின்றன. அதே வேளையில், “பினராயி விஜயனை இன்னும் ஏன் பா.ஜ.க குறிவைக்கவில்லை?” என்று தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி, பொறுப்பற்ற முறையில் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய சில காங்கிரஸ் தலைவர்களின் வெற்று வாதங்களையும் இந்த நடவடிக்கை அம்பலப்படுத்தியுள்ளது!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
கேரளா: “பொறுப்பற்ற முறையில் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய காங்கிரஸ்” – ஸ்டாலின் குற்றச்சாட்டு |Kerala: “Congress Leveled Irresponsible Allegations” – Stalin Alleges