Sports
oi-Yogeshwaran Moorthi
நியூ ஜெர்சி: ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான கோல்டன் பூட் ரேஸில் அர்ஜென்டினா அணியின் ஜாம்பவான் வீரரான லியோனல் மெஸ்ஸி முதலிடத்தில் நிறைவு செய்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலேயே மெஸ்ஸி 2 அசிஸ்ட் செய்ததன் மூலமாக, இந்த ரேஸில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் – அர்ஜென்டினா அணிகள் விளையாட உள்ளன. நேற்றிரவு நடைபெற்ற அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியது. 84 நிமிடங்கள் வரை அர்ஜென்டினா அணியால் முதல் கோலை கூட அடிக்க முடியவில்லை.

ஆனால் 85வது நிமிடத்தில் என்சோ ஃபெர்னாண்டஸ் மற்றும் 2ஆம் பாதியின் கூடுதல் நிமிடத்தில் லொட்டாரோ மார்ட்டினஸ் இருவரும் அசத்தலாக கோல் அடித்தனர். இவர்கள் இருவரும் கோல் அடிக்க முக்கிய காரணமாக அமைந்தவர் லியோனல் மெஸ்ஸி. இந்தப் போட்டியில் மெஸ்ஸியால் ட்ரிபிள் செய்து பாக்ஸ் பக்கமே செல்ல முடியவில்லை. இதனை உணர்ந்து கிராஸ் கொடுத்து இங்கிலாந்து திட்டத்தை தவிடு பொடியாக்கினார்.
இந்த 2 கிராஸ்களும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்டஹி ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலமாக ஃபிஃபா உலகக்கோப்பை தொடருக்கான கோல்டன் பூட் ரேஸில் மெஸ்ஸி முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இந்த உலகக்கோப்பை தொடரில் மெஸ்ஸி 8 கோல்களை அடித்துள்ள நிலையில், 4 அசிஸ்ட் செய்துள்ளார். இவருக்கு பின் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே 8 கோல், 3 அசிஸ்ட் மூலம் 2வது இடத்தில் இருக்கிறார்.
நார்வே அணியின் எர்லிங் ஹாலண்ட் 7 கோல்களுடன் 3வது இடத்திலும், இங்கிலாந்து அணியின் பெல்லிங்கம் 6 கோல், 1 அசிஸ்ட் மூலம் 4வது இடத்திலும், இங்கிலாந்து அணியின் ஹாரி கேன் 6 கோல், 1 அசிஸ்ட் மூலம் 5வது இடத்திலும் இருக்கின்றனர். டாப் 5 பட்டியலில் உள்ள வீரர்கள் யாரும் இறுதிப் போட்டியில் ஆடப் போவதில்லை.
இருப்பினும் 3வது இடத்திற்கான ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளன. அதில் கிலியன் எம்பாப்பே, ஹாரி கேன், பெல்லிங்கம் உள்ளிட்டோர் விளையாடுகின்றனர். இருப்பினும் இறுதிப் போட்டியில் மெஸ்ஸி ஒரேயொரு கோல் அடித்தால் கூட எளிதாக கோல்டன் பூட் விருதை கைப்பற்ற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
