கோவிட்: 2.21 கோடி மரணங்கள்; அம்பலமான தரவு குளறுபடிகள்… WHO அறிக்கையின் பின்னணி! | COVID: 22.1 Million Deaths… Data Discrepancies Exposed… The Reality Behind the WHO Report!

Spread the love

தரவு சேகரிப்பில்  குளறுபடிகள்

உலக நாடுகள் மரண கணக்குகளைப் பதிவு செய்வதில் இருக்கும் பெரும் பலவீனத்தை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
2023-ம் ஆண்டில் உலகளவில் நிகழ்ந்த (தோராயமாக) 6.1 கோடி மரணங்களில், மூன்றில் ஒரு பங்கு மரணங்களுக்கு மட்டுமே முறையான இறப்புக்கான காரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பிடம் வெறும் 18% நாடுகள் மட்டுமே ஒரு வருடத்திற்குள் தங்களது மரணத் தரவுகளை முறையாகச் சமர்ப்பிக்கின்றன. மூன்றில் ஒரு பங்கு நாடுகள் தங்களது நாட்டில் நிகழும் மரணங்களுக்கான காரணங்களை ஒருபோதும் உலக சுகாதார நிறுவனத்திடம் தெரிவிப்பதே இல்லை.

கோவிட் மரணங்கள்

கோவிட் மரணங்கள்

குறிப்பாக, 2022-க்குப் பிறகு பல நாடுகள் பரவலான கோவிட் பரிசோதனைகளை நிறுத்திவிட்டதால், உண்மையான மரணங்கள் அதிகாரபூர்வக் கணக்கில் வராமல் விடுபட்டுள்ளன.

முன்பே கணித்த WHO… மறுத்த இந்தியா!

2020-2021 காலக்கட்டத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 47.4 லட்சம் கூடுதல் மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு முன்னரே ஒரு தனிப்பட்ட ஆய்வில் கணித்திருந்தது. எனினும், இந்திய அரசு இந்தத் தரவை அப்போது மறுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *