தரவு சேகரிப்பில் குளறுபடிகள்
உலக நாடுகள் மரண கணக்குகளைப் பதிவு செய்வதில் இருக்கும் பெரும் பலவீனத்தை இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
2023-ம் ஆண்டில் உலகளவில் நிகழ்ந்த (தோராயமாக) 6.1 கோடி மரணங்களில், மூன்றில் ஒரு பங்கு மரணங்களுக்கு மட்டுமே முறையான இறப்புக்கான காரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பிடம் வெறும் 18% நாடுகள் மட்டுமே ஒரு வருடத்திற்குள் தங்களது மரணத் தரவுகளை முறையாகச் சமர்ப்பிக்கின்றன. மூன்றில் ஒரு பங்கு நாடுகள் தங்களது நாட்டில் நிகழும் மரணங்களுக்கான காரணங்களை ஒருபோதும் உலக சுகாதார நிறுவனத்திடம் தெரிவிப்பதே இல்லை.

குறிப்பாக, 2022-க்குப் பிறகு பல நாடுகள் பரவலான கோவிட் பரிசோதனைகளை நிறுத்திவிட்டதால், உண்மையான மரணங்கள் அதிகாரபூர்வக் கணக்கில் வராமல் விடுபட்டுள்ளன.
முன்பே கணித்த WHO… மறுத்த இந்தியா!
2020-2021 காலக்கட்டத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 47.4 லட்சம் கூடுதல் மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு முன்னரே ஒரு தனிப்பட்ட ஆய்வில் கணித்திருந்தது. எனினும், இந்திய அரசு இந்தத் தரவை அப்போது மறுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.