கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் நள்ளிரவில் திடீர் ஆய்வு – காரணம் என்ன?

Spread the love

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சம்பத் கடந்த 28-ம் தேதியன்று கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் பலவிதமான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவில் கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பராமரிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் முறையாக நடைபெறுகின்றன என்பதை ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் சம்பத் ஆய்வு
அமைச்சர் சம்பத் ஆய்வு

தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்களின் பட்டியலை ஆய்வு மேற்கொண்ட அவர் அனைவரும் பணியில் இருக்கின்றனரா? வருகை பதிவேடு முறையாக பதிவு செய்யப்படுகின்றதா? என்பன குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளாகத்தில் இரவு நேரத்தில் செயல்படும் சிகிச்சை பிரிவுகள் குறித்தும், வெளி நோயாளிகள் பிரவில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் நேரடியாக அமைச்சர் சம்பத் ஆய்வு மேற்கொண்டார்.

நள்ளிரவு நேரத்தில் அதிகாரிகள் யாருமின்றி, தனது கார் டிரைவருடன் கோவை அரசு மருத்துவமனைக்கு விசிட் அடித்த அமைச்சர் சம்பத் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மருத்துவமனையில் முகாமிட்டு மருத்துவ பணிகளை ஆய்வு செய்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *